லாரியில்ரேஷன் அரிசி கடத்ததிய 3 பேருக்கு சிறை தண்டனை

கோவை ஆகஸ்ட் 9 பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்க்ல்துறை போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு பொள்ளாச்சி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அப்போது கேரளாவுக்கு கடத்துவதற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியிலிருந்து தெரியவந்தது .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆந்திராவைச் சேர்ந்த கவாம கோட்டா (வயது 65) நெகமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் காசிநாதன் (வயது 27) செல்வராஜ் (வயது 47) பொள்ளாச்சி ரங்கம் புதூர் சேர்ந்த பழனிச்சாமி (வயது 56 )ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரியும் 17 டன் ரேஷன் அரிசிபறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு கோவை ஜே.எம் ( எண் 4 ) நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கைவிசாரித்த நீதிபதி அருண்குமார் ரேஷன் அரிசி கடத்திய காசிநாதன், செல்வராஜ், பழனிச்சாமி, ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் .வழக்கு நடைபெற்ற போது ஆந்திராவைச் சேர்ந்த கவாம் கோட்டா இறந்து விட்டார்.