கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து லேப்டாப் ‘செல்போன் திருட்டு

கோவை ஆகஸ்ட் 23 நெல்லை மாவட்டம் முக்கூடல்,வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் இவரது மகன் தினேஷ் கார்த்திக் ( வயது 22 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.அங்குள்ள குளத்துப்பாளையம், சரவணா நகரில் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். சம்பவத்தன்று தினேஷ் கார்த்திக் பாத்ரூம் சென்றிருந்தார் .அவரது நண்பர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ அறைக்குள் புகுந்து அங்கிருந்த செல்போன் 2லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.. இது குறித்து தினேஷ் கார்த்திக் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.