கடன் தொல்லையால் தூக்கு போட்டுஎலக்ட்ரீசியன் தற்கொலை

கோவை ஆகஸ்ட் 23 கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள கே .கே . புதூர் ,சர்ச் ரோட்டை சேர்ந்தவர் அழகுமலை இவரது மகன் ஹரி கிருஷ்ணன் (வயது 29 )எலக்ட்ரீசியராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் துபாய் சென்றிருந்தார்.அங்கு வேலை பிடிக்காததால் ஊருக்கு திரும்பி விட்டார் இதற்காக அவர் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் மன அழுத்தத்துடன் காணப்பட்ட ஹரி கிருஷ்ணன் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் இது குறித்து அவரது தந்தை அழகுமலை சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.