வங்கியின் முன் ரத்த காயத்துடன் கிடந்தவர் சாவு

கோவை செப்டம்பர் 4கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியின் முன் நேற்றுஉடலில் ரத்த காயங்களுடன் ஒருவர் கிடந்தார். அவரை சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார் .அவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசு மருத்துவமனை இருப்பிடம் மருத்துவ அதிகாரி சரவணா பிரியா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.