கோவையில் ஒரே நாளில் விபத்தில் 2 பெண்கள் பரிதாப சாவு

கோவை செப்டம்பர் 5 கோவை வெள்ளலூர் ரோடு சமண்ணா நகரை சேர்ந்தவர் எடிசன். இவரது மனைவி அன்னபாக்கியம் (வயது 40 )இவர் நேற்று தனது கணவருடன் மொபட்டில் வெள்ளலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். போத்தனூர் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம் அருகே சென்றபோது திடீரென்று நிலைதடுமாறு கீழே விழுந்தார் .இதில் அன்னபாக்கியம் படுகாயம் அடைந்தார் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர் வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதேபோல மாச்சம் பாளையம், விஆர் தோட்டத்தைச் சேர்ந்தவர் வீராசாமி .இவரது மனைவி லலிதா (வயது 49 இவர் நேற்று துடியலூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகவேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் லலிதா படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார்.. இதுகுறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்குசென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக பைக் ஓட்டி வந்த காரமடை கே. ஆர். நகரை சேர்ந்த மனோஜ் குமார் ( வயது 20) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.