கோவைசெப்டம்பர் 6 கோவை போத்தனூர் மேட்டூர், புது வீதியைச் சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி பூங்கொடி ( வயது 50) இவர்களது இளைய மகள் சசிகலாவுக்கு12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகசசிகலா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார் .இந்த நிலையில் சசிகலா அதே பகுதியைச் சேர்ந்த உமர் முகம்மது ( வயது 25) என்பவரைகடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி.உமர் முகம்மது செல்போனில் வேறு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை சசிகலா கண்டித்தார். இதனால்அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த உமர் முகம்மது தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி வயிற்றில் எட்டி உதைத்தாராம் இது பற்றி தகவல் அறிந்ததும் சசிகலாவின் தாயார் பூங்கொடி அங்கு சென்றார் அவரையும் உ ம்மர் முகம்மது தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி, கத்தியால் குத்தினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . இது குறித்து பூங்கொடி சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து உமர் முகமதுவை கைது செய்தனர் .அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0