கோவை செப்டம்பர் 10 கோவை சுந்தராபுரம், அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 74 ) செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார் .இவர் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று குறிச்சி குளத்தில்அவர் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவர் குளத்தில்தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. இது குறித்த அவரது மகன் விஜயகுமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0