பீடி குடிக்கும் போது வேட்டியில் தீப்பிடித்து முதியவர் கருகி சாவு.

கோவை செப்டம்பர் 11 கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 62) சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.இவர் கடந்த 7-ந்தேதி படுத்துக்கொண்டே பீடி குடித்தாராம். அப்போது பீடி தீ இவரது வேட்டியில் பட்டு தீப்பிடித்தது. இதில் உடல் முழுவதும் கருகியது. உயிருக்கு போராடியை இவரை அக்கம்,பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.