கோவை செப்டம்பர் 12 கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் .நகர், நியூகாயத்ரி கார்டன், வித்யா காலனியை சேர்ந்தவர் குமார தேவ், இவரது மகள் ரம்யா ஸ்ரீ (வயது 34) இவருக்கும் இவரது தூரத்து உறவினரான ஜெகதீஜித் என்பவருக்கும் 20 -2 -20 24 அன்று திருமணம் நடந்தது திருமணத்திற்கு முன்பு மணமகனின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக கேட்டனர். ரம்யா ஸ்ரீயின் பெற்றோர் 100 பவுன் நகையைதிருமணத்தின் போது போட்டனர்.மீதி 100 பவுன் நகை கொடுக்க தாமதமானதால்கணவர் ஜெகதீஜித் அவரது தாயார், தந்தை ஆகியோர் சேர்ந்து ரம்யா ஸ்ரீயை அடித்த உதைத்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது இது குறித்து ரம்யா ஸ்ரீ கோவை மத்திய பகுதி அனைத்துபெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி இது தொடர்பாக விசாரணை நடத்தி ரம்யா ஸ்ரீயின் கணவர் ஜெகதீஜித், அவரது தந்தை, தாய் ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை,தாக்குதல்உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0