புதுப்பிக்கும் வீட்டில் 20 பவுன் நகை -பணம் கொள்ளை!

கோவை செப்டம்பர் 12 கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டைசேர்ந்தவர் டேனியல் இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ஆயிரம் ,மற்றும்வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனது.இதுகுறித்து கெவின் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கன்னையன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..