கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி சாவு

கோவை செப்டம்பர் 13 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் குமார் ( வயது 25) கூலி தொழிலாளி இவர் சுந்தராபுரம் மதுக்கரை ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரில் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார்.உயரமான இடத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்தக்காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்தவீட்டின் உரிமையாளர் ரவிச்சந்திரன் (வயது 57 )மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.