25 கிலோ கஞ்சாவுடன் வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது

கோவை செப்டம்பர் 15சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு மலுமிச்சம்பட்டியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் வந்தது இதன் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சட்டத்திற்கு விரோதமாக 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் மகன் கண்டால ராம லட்சுமணன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். இவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, திருப்பூர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள குமரன் பூங்கா முன்பாக ஒருவர் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தார். இந்நிலையில் காவல்துறையினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப் போது சட்டத்திற்கு விரோதமாக 20 கிலோ கஞ்சாவைத்திருந்த ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த ராஜபாபு மகன் மந்த வீரபாபு (வயது21) என்பவரை ககைது செய்தனர்.இந்நிலையில் இருவரிடமும் சட்டத்திற்கு விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்..இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.