சமூக வலைதளத்தில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த ஜிம் மாஸ்டர் கைது

கோவை செப்டம்பர் 19 கோவை அருகே உள்ள வடவள்ளியில் உடற்பயிற்சி கூடம்நடத்தி வருபவர் சஞ்சய் (வயது 29) இங்கு உடற்பயிற்சி செய்ய இளம்பெண் ஒருவர் வந்தார். அவருடன்பேசி பழகிய ஜிம் பயிற்சியாளர் சஞ்சய் அவரை காதலிப்பதாக கூறினார். அதை ஏற்க மறுத்த அந்த இளம்பெண் உடற்பயிற்சி கூடத்துக்கு செல்வதை தவிர்த்து விட்டார் .இந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய தாராம். இதுகுறித்து அந்த இளம் பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் அதில் சஞ்சய் தான் அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சஞ்சய் கைது செய்யப் பட்டார் .அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.