கோவை செப்டம்பர் 19 கோவைசாய்பாபா காலனி என். எஸ். ஆர். ரோடு, வேலப்பர் வீதியைச் சேர்ந்தவர் பாலகுமார் ( வயது 33) இவர் ஒரு டாக்டர் இடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவருக்கும் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ( வயது 20) சிவா (வயது 19 )ஆகிய 2 பேருக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர்கள் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த 8- 2 .20 17 அன்று பாலகுமார் அந்த பகுதியில் ஒரு பேக்கரி வழியாக நடந்து சென்றார். அப்போது நாகராஜ், சிவா ஆகியோர் மது குடிப்பதற்கு பணம் கேட்டனர். அவர் இல்லை என்று கூறினார் இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன், சிவா ஆகியோர் சேர்ந்து கத்தியால் பாலகுமாரை சரமாரியாக குத்தினார்கள் இதில் பலத்த காயமடைந்தபாலகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாகதுடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் ,சிவா ஆகிய 2 பேரை கைது செய்தனர் ,அவர்கள் மீது தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிரான வன்கொடுமை திட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தாழ்த்தப்பட்டோர்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை தடுப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜ் , சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஆஜர் ஆனார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0