பைக் மோதி ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டி பலி

கோவை செப்டம்பர் 20 கோவை ராமநாதபுரம், ராமலிங்க ஜோதி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மரகதம் அம்மாள் (வயது 68) இவர் நேற்று ராமநாதபுரம், ஒலம்பஸ் ; 80 அடி ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் மரகதம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த நஞ்சுண்டாபுரம், சுவாமி விவேகானந்தர் வீதியை சேர்ந்த கண்ணபிரான் (வயது 65 )என்பவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..