மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர்தூக்கு போட்டு தற்கொலை

கோவை செப்டம்பர் 24 கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கோப்பனூர் புதூரை சேர்ந்தவர் ஜோதி முருகன் (வயது 51) இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இந்த நிலையில் ஜோதி முருகன் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். குடிப்பழக்கத்திற்குஅடிமையானார். வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாயார் காமாட்சி நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.