3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை கோவை செப்டம்பர்26

கோவை அருகே உள்ள வடவள்ளி ,எம்.கே.எஸ். நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் ( வயது 55 )இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று இருந்தார். மாலையில் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க கைச்செயின், 2 பவுன் கம்மல், பணம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் இதுகுறித்து வெங்கடேஸ்வரன் வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல வீரகேரளம் ,கே .பி கே. நகரை சேர்ந்தவர் கங்காதரன் ( வயது 46) இவர் அங்குள்ள அப்பார்ட்மெண்டில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.அந்த அப்பார்ட்மெண்டில் சொந்த வீடு வைத்திருப்பவர் கந்தவேலு .இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த வீட்டை மேனேஜர் கங்காதரன் கவனித்து வந்தார். இந்த நிலையில் அந்த வீட்டில் பூட்டை உடைத்துஉள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் , ரூ 1லட்சத்து 70 ஆயிரம் பணம் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து மேனேஜர் கங்காதரன் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவைப்புதூர், ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் சாஜன் .இவர் கடந்த 21- ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்று இருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த டி.வி, கார் சாவி , ரூ 5 ஆயிரம் பணம் ஆகியவற்ற காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சாஜன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.