கோவை அக்டோபர் 6 கோவை சாய்பாபா காலனி, பக்கமுள்ள வேலாண்டிபாளையம், ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் ராஜா மணி. அவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 25 )குடிப் பழக்கம் உடையவர் .இவர் நேற்று வீட்டில்குடிபோதையில் தனது குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென்று ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்கில் தொங்கினார். இதை பார்த்த அவரது மனைவி ஆர்த்தி அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0




