கோவை அக்டோபர்24 கோவை கவுண்டம்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் கவுதம் ( வயது 22 )நேற்று இவர் தன் வீட்டின் முன் சகோதரி மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2ஆசாமிகள் பைக்கை திடீரென்று நிறுத்தி கவுதமிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் பணம் இல்லை என்று கூறினார் .இதனால்ஆத்திரமடைந்தஅந்த ஆசாமிகள் கத்தியால் கவுதமை குத்தினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பின்னர் அவரிடமிருந்து 300 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கவுதம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்த கிரன் என்ற கிரன் ராய் (வயது 25) என்பவரை கைது செய்தார் .மேலும் ஒருவரை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





