கோவை அக்டோபர் 25 கோவை சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் ( வயது 62) ராஜ்குமார் (வயது 46) ராஜேந்திர குமார் ( வயது 57) மணிகண்டன் ( வயது 29 )சபரீஷ் ( வயது 26) கார்த்திக் ராஜா (வயது 27) மோகன் குமார் (வயது 27) கோகுலகிருஷ்ணன் ( வயது 23) மோகன்ராஜ் (வயது 27) பாலமுருகன் ( வயது 28 )திலீப் குமார் (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ.6,470 பறிமுதல் செய்யப்பட்டது. சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





