கோவை அக் 27 கோவை ஆலாந்துறை அருகே போளூவாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் லவேந்திரன் என்ற குமார் ( வயது 51) இவர் கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டுகோவை காந்திமா நகரில் வசித்து வந்தார் .கடந்த 20 21- ம் ஆண்டு மனைவி கவிதாவை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் லவேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது .இதனால் அவர் கடந்த20 24 ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. அதற்காக அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





