மாடியில் துணி காய போடும் போது தவறி விழுந்து ஒருவர் சாவு.

கோவை அக் 27. கோவை துடியலூர் ஜி.என்.மில், மீனாட்சி கார்டனை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 62) இவர் நேற்று அவரது வீட்டின் முதல் மாடியில் நின்று துணி காய போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால்தவறி கீழே விழுந்தார் .தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து மனைவி சுமதி துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.