கோவை அக் 28 கோவைவடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி ( வயது 40) வடவள்ளியை சேர்ந்தவர் சுஜாதா ( வயது 44) இவர்கள் இருவரும் வறுமை நிலையில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசைவார்த்தை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துபெண் தரகர்கள் மூர்த்தி, சுஜாதா ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கோவை தெற்கு பகுதி போலீஸ் கமிஷனர் பரிந்துரையின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மேற்கண்ட மூர்த்தி ,சுஜாதா, ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை யடுத்து இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு சிறையில் உள்ள மூர்த்தி ,சுஜாதா ஆகியோருக்கு நேற்று வழங்கப்பட்டது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





