கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் டிரைவராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவ கண்ணன் ( வயது 27) என்பவர் பணியாற்றி வந்தார். ஆயுதப்படை போலீஸ்காரரான இவர் இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினர் போல பழகி வந்தார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் தனது மகள்களை பார்த்துக் கொள்வதற்காக உறவினரான இளம்பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்திருந்தார். கடந்து 2 நாட்களாக வேலையின் காரணமாக இன்ஸ்பெக்டர் மதுக்கரையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இதனால் தனது டிரைவரான மாதவ கண்ணனை பாதுகாப்புக்காக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் குளித்த போது அதனை மறைந்திருந்து மாதவ கண்ணன் செல்போனில் வீடியோ எடுத்தாராம். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் உடனடியாக செல்போன் மூலம் நடந்ததை கூறி அழுதார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை நடத்தி இளம் பெண் குளிக்கும் போது வீடியோ எடுத்த போலீஸ்காரர் மாதவ கண்ணனை நேற்று கைது செய்தனர். பாதுகாப்புக்காக சென்ற போலீஸ்காரர் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0







