மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த முதியவர்..!

கோவை உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 80) செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் நேற்று டவுன்ஹால் பொதுக்கழிப்பிடம் அருகே உட்கார்ந்து செருப்பு தைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார். பணம் கொடுக்க மறுத்ததால் அந்த நபர் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து முதியவரை தாக்கியதாக குனியமுத்தூர் பி.கே. புதூர், மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த அப்பாஸ் ( வயது 47) என்பவரை கைது செய்தார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,