ரோட்டில் கார் கவிழ்ந்து பயணி சாவு.மற்றொருவர் படுகாயம்.கோவை ஜூன் 10 கோவை மேட்டுப்பாளையம் ரோடு,துடியலூர் ரோடு சந்திப்பில் நேற்று வேகமாக வந்த ஒருவாடகை கார்அங்குள்ள வளைவில் திரும்பும் போது நடுரோட்டில் கவிழ்ந்தது .இதில் காரில் பயணம் செய்த பயணி ரத்தினபுரி லோகேஷ் ( வயது 25) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார்.மற்றொரு பயணியான லோகேஷ் படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த கீரணத்தம் பகுதியை சேர்ந்த டிரைவர் பிரவீன் குமார் (வயது 28)மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0