மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற தாய் பரிதாப சாவு

கோவை செப்டம்பர் 30 கோவை ராமநாதபுரம் ,80 அடி ரோடு ,வ .உ. சி .நகரை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி வினோதா ( வயது 43 )இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் தனதுமகன் விஜய் ஆனந்துடன்ஸ்கூட்டரில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் வைத்திருந்த கைப்பையில் செல்போன் ஒலித்தது. உடனே செல்போனை எடுக்க முயன்றாராம். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில்பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது கணவர் கண்ணன் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.