கோவை ஜூன் 21 .தூத்துக்குடியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் காரமடையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிந்து வருபவபர் வினோத்குமார் ( வயது 40) இவருக்கும் நர்சிங் கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் .இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி திடீரென்று காணாமல் போய்விட்டார் .இதை யடுத்து அவரை காணவில்லை என வினோத்குமார் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ,புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மாணவியை அவரது தந்தை ,அக்கா, தங்கை, அத்தை உள்ளிட்டோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இருந்து காரில் காரமடைக்கு வந்து கடத்திச் சென்றது தெரிய வந்தது .காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியை காரில் கடத்திச் சென்ற குடும்பத்தினரை காரமடை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0