கோவை ஆகஸ்ட் 1 கோவை துடியலூர், ஜி. என். மில், சேரன் நகரை சேர்ந்தவர் விஜயன் (வயது 70) இவர் நேற்று கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையம் ரோடு சந்திப்பில் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு சென்றார் . அப்போது அந்த வழியாகவேகமாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் விஜயன் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து மேற்கு பகுதிபோக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல்சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0