கோவை ஜூன் 11 கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம் பெரிய வீதியை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 50 )அங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வருகிறார். இதனால் அவரது வீட்டில் நைட்டி ,சேலை வேட்டி உள்ளிட்டதுணிகள் எப்போதும் இருக்கும். மாணிக்கராஜ் நேற்று குடும்பத்தினருடன் வெளியே சென்று இருந்தார் .இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் மின் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில்பீளமேடு தீயணைப்பு நிலையவீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினார்கள். இதற்கிடையே மேல் தளத்தில் பற்றி எரிந்த தீ கீழ் தள த்திற்கும் பரவி சமையலறைக்குள் புகுந்தது .அந்த சமையலறையில் 2 கியாஸ் சிலிண்டர் இருந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதில் ஒரு சிலிண்டர் கியாஸ் அடுப்புடன் பொருத்தப்பட்டும், மற்றொரு சிலிண்டர் மூடி வைக்கப்பட்டும் இருந்தது. தீயின் வெப்பத்தால் அடுப்புடன் பொறுத்தி யிருந்த சிலிண்டர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்த சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் .சிலிண்டர் வெடித்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் திணறினார்கள். இதை தொடர்ந்து மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை பாதுகாப்பாக வெளிய எடுத்து வந்தனர். இதனால் மேலும் அசம்பாவிதம்ஏற்படாமல் தடுக்கப்பட்டது. சிலிண்டர் வெடித் தில் வீட்டின் உட்பகுதி பலத்த சேதம் அடைந்தது. வீட்டிலிருந்த பீரோ துணிமணிகள் உள்ளிட்ட பல பொருட்கள்எரிந்து நாசமானது. ஆனால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை தீ விபத்து குறித்துபீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0