கோவை இளைஞருக்கு தர்ம அடி.!!

கோவை அருகே உள்ள துடியலூர், என் ஜி ஜி ஓ காலனியை சேர்ந்தவர்மோகன் . இவரது மனைவி கனகவல்லி (வயது 61) பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று அங்குள்ள ரங்கம்மாள் காலனியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி கனகவல்லியின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கம் ஓடி வந்து நகை பறிக்க முயறை அந்த ஆசாமியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் துடியலூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணை அவர் பெரியநாயக்கன்பாளையம் ,ஜோதிபுரம் ராஜூ நகரில் வசிக்கும் செல்ல முத்து மகன் கார்த்திக் (வயது 21) என்பது தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் வால்பாறை பக்கம் உள்ள சோலையார் டேம் ,உருளிக்கல் எஸ்டேட்ஆகும். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது..