குளியலறையில் இளம் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது

கோவை ஜூன் 6 கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.சம்பவத்தன்று அந்தப் பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார் இதனை கார்த்திக் ராஜா மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த இளம்பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். நடந்த சம்பவம் குறித்து இளம்பெண் கூறி கதறி அழுதார். உடனே அவர்கள் கார்த்திக் ராஜா வை கையும் களவுமாக பிடித்துதொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கார்த்திக் ராஜாவைபோலீசார் கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.