கோவை ஜூன் 18 கோவை அருகே உள்ள கோவை புதூர், குற்றாலம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மனோஜ் (வயது 30) இவர் நேற்று மதியம் குனியமுத்தூர் மைல் கல்,பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி விரட்டி அவரது சட்டை பையிலிருந்த 500 ரூபாய் பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து மனோஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மைல் கல், சுகுணாபுரம் (கிழக்கு) செந்தமிழரை சேர்ந்த சூரியகுமார் என்ற கில்லி என்ற குண்டு சூர்யா (வயது 27) என்பவரை நேற்று கைது செய்தனர். இவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0