கோவை ஜூலை 21 கோவை செல்வபுரம் குமாரபாளையம், நேரு காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுதா ( வயது 32) இவர் கிராஸ்கட் ரோடு 4-வது வீதியில் டெய்லரிங் கடை நடத்தி வருகிறார்.இவரது பாட்டி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து சுதா மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று அவரது கடையில்யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது .இவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து கணவர் ரவி காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0