கோவை ஜூலை 11 கோவை வேடப்பட்டி அருகே உள்ள கலிக்க நாயக்கன்பாளையம், டாங்க் விதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 54) இவர் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி சாந்தி. இவர் குரும்ப பாளையத்தை சேர்ந்த அமுதா (வயது 45) என்பவரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரூ. 3 ஆயிரம் கொடுத்ததாராம். ஆனால் கடன் வாங்கி தருவதில் அமுதா தாமதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அமுதாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்து தகரத வார்த்தைகள் பேசினார். மேலும் அவர் அமுதாவை கத்தியால் குத்தி குத்தினார். இதில் அமுதா படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ளஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் இதை யடுத்து முத்துக்குமார் நேற்று போன் செய்து அமுதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை நேற்று கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0