கோவை ஜூன் 14 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள செந்தாம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 52) விசைத்தறி தொழிலாளி இவர் நேற்று அங்குள்ள – பச்சாபாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கரிச்சிபாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி இவரது பைக் மீது மோதியது .இதில் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மகன் பூபதி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவர் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0