ஆள் மாறாட்டம் செய்து வனத்துறைவேலைக்கு சேர முயன்ற வட மாநில வாலிபர் கைது

கோவை ஜூன் 14 உத்திரபிரதேச மாநிலம், ஹாரா மாவட்டம், குஸ்கி நகரை சேர்ந்தவர் துர்க்கேஷ்குமார் ( வயது 33 )இவர் வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில்கடைநிலை ஊழியர் வேலையில் சேருவதற்காகஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி,தேர்ச்சி செய்யப்பட்டவரின் வேலை வாய்ப்பு உத்தரவை கொடுத்து பணியில் சேர வந்தார்.இதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அதன் இயக்குனர் டாக்டர். யசோதா, சாயிபாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து அவரது கையெழுத்து மற்றும்புகைப்படத்தை சரிபார்த்தார். அதில் அது போலி என்பது தெரியவந்தது.இவருக்கு பதிலாக வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொருவர் ஆழ் மாறட்டம் செய்துதேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து துர்க்கேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக தேர்வு எழுதிய வரை தேடி வருகிறார்கள்.