கோவை ஜூன் 27 சேலம் மாவட்டம்,மேட்டூரை சேர்ந்தவர் கருப்பு செட்டி .இவரது மகன் கவின்ராஜ் (வயது 25) ஐ.டி.ஐ. படித்த இவர் கோவை சூலூர் அருகே உள்ள குரும்பபாளையத்தில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினார் .பின்னர் அருகே உள்ள பாரில்அமர்ந்து மது அருந்தினார். அப்போது அந்த பாரில் வேலை செய்து வரும் ஊழியரிடம் தகராறு செய்தாராம் .இதனால் ஆத்திரமடைந்த பார் ஊழியர் கீழே கிடந்த கல்லை எடுத்து கவின்ராஜின் தலையில் தாக்கினார் .இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதை அறிந்த கவின்ராஜன் நண்பர்கள் அங்கு சென்று குடிபோதையில் அவர் மயங்கி கிடப்பதாக கருதி அவரை மீட்டு அறையில் படுக்க வைத்தனர் .மறுநாள் காலையில் பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு அங்கு ஊழியராக வேலை செய்த ஒரு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த தர்மர் (வயது 27) என்பவர் கீழே கிடந்த கல்லை எடுத்து கவிதாவின் தலையில் தாக்கியதும் ,அதில் அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பார் ஊழியர் தர்மரை நேற்று கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0