கோவை ஜூலை 22 கோவை இடையர் பாளையத்தைசேர்ந்தவர் வைஷ்ணவி ( வயது 20) தி.மு.க. உறுப்பினர் .இவர் நேற்று கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகாசினியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தமிழக வெற்றி கழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உறுப்பினராக இணைந்து மக்கள் பணி செய்து சமூக வலைதளத்திலும் கட்சியின் கொள்கைகளை பரப்பினேன். அதன் பிறகு அந்த கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்துள்ளேன். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் என்னைப் பற்றி அவதூராகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வருகிறார்கள். அத்துடன் எனது புகைப்படத்தை மோசமாக சித்தரித்தும் பதிவேற்றம் செய்கிறார்கள். அதை அந்த கட்சியின் தலைவர் விஜய் கண்டிக்கவில்லை. எனவே என்னை பற்றி அவதூறு பரப்பி வரும் அந்த கட்சியின் நிர்வாகிகள் மீதும் தலைவர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0