கோவை ஜூன் 12கோவைசெல்வபுரம் தெற்குஹவுசிங் யூனிட் கல்லா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 47) இவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள நீராவி சுத்தம் செய்யும அறை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம்இருந்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார். ஷாஜகான் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அந்த ஆசாமியைமடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கோவை,ராமநாதபுரம் சுங்கம், அகஸ்தியன் பேட்டையை சேர்ந்த ஹரிஷ் (வயது 25) என்பது தெரியவந்தது.பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0