கோவை மே 29 தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் . இவரது மகன் முத்துராஜ் ( வயது 22 )இவர் சாய்பாபா காலனி பக்கம் உள்ள கோவில் மேடு மஞ்சேஸ்வரி காலனியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம் இது குறித்து சாய்பாபா காலனி போலீசுக்கு தகவல் கிடைத்தது .இதை யடுத்து சப்- இன்ஸ்பெக்டர் தீபா சம்பவ இடத்துக்கு சென்று முத்துராஜை கைது செய்தார். இவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி – பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0