கோவை ஜூன் 28 கோவையை சேர்ந்த வக்கீல்கள் பிரவீன் ,பிரியங்கா, சுவாதி மற்றும் சிலர் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர் .அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நடிகர் பயில்வான் ரங்கநாதன் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதுடன், பெண்களை இழிவாக வருகிறார்.. இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட வருகிறார்கள். அவர்கள் பேசும் கருத்துக்கள் பெண்கள் மீது தவறான பார்வை உருவாகவும், தவறான வழிகாட்டுதலாகவும் உள்ளது .எனவே நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிய அனைத்து பேச்சுகளையும் சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் .அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0