உக்கடம் பஸ் நிலையத்தில் அரசு பஸ் மோதி முதியவர் சாவு.

கோவை ஜூலை 10 கோவை உக்கடம் டவுன் பஸ் நிலையத்தில் நேற்று நடந்து சென்ற ஒருவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். அவருக்கு 75 வயது இருக்கும். அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள் .இது தொடர்பாக சூலூர்,செங்காளியப்பன் நகரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பாரதி ராஜன் (வயது 37)மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.