கோவை ஜூலை 24 கோவை புலியயகுளம், அம்மன் குளம் ஹாஸ்பிடல் காலனி சேர்ந்தவர் அஸ்சலாம் ( வயது 37 )இவர் காந்திபுரம் 100 அடி ரோட்டில் மட்டன் – சிக்கன் ஸ்டால் நடத்தி வருகிறார். சம்பவம் கடையை திறந்து வைத்துவிட்டு பாத்ரூம் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது கல்லாவில்இருந்த பணம் ரூ 9 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்றுவிட்டனர் .இது குறித்து அஸ்சலாம் காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்த தில் அந்த பணத்தை ஒரு முதியவர் திருடியது தெரிய வந்தது .இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோடங்கிப்பட்டியை சேர்ந்த முரளி என்ற முத்துவேல் (வயது 72) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் தான் இந்த பணத்தை திருடியது தெரியவந்தது.மேலும் விசாரணை நடந்து வருகிறது

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0