கோவை, மே 29- கோவை இருகூர் பஜனை கோயில் வீதியை சேர்ந்தவர் சின்னையா (62). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சின்னையாவிற்கும் அவரது இரண்டாது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி கோபித்து கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றார். இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். கடந்த 26ம் தேதி வாழ்க்கையில் விரக்தி அடைந்த சின்னையா விஷத்தை குடித்து வீட்டின் முன்பு மயங்கி இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0