கோவை ஆகஸ்ட் 19 கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, டி.வி.கே. நகரை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் ( வயது 67) இவர் அவரது வீட்டின் ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் வழுக்கி 10 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அவரது மனைவி டாக்டர்.திவ்யபிரியா (வயது 55)வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0