கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் வால்பாறை, அண்ணா நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி அருக்காணி (வயது 72 ) இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை மரவிட்டத்தில் கட்டி தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது கணவர் தர்மலிங்கம் வால்பாறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0