சிப்ஸ் கடை அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது

கோவை ஜூன் 12 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் நேற்று கவுண்டம்பாளையம்நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ளஒரு சிப்ஸ் கடை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சோதனை நடத்தினார் .அவரிடம் 1கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம் ரூ 4 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். .விசாரணையில்அவர் சாய்பாபா காலனி பெரியார் நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்த சுதாகர் மனைவி ரகமத் சந்திரா ( வயது 68) என்பது தெரியவந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது .