கோவை அக் 27 கோவை செல்வபுரம் நாடார் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகமணி. ( வயது 65)நேற்று இவர் அங்கு ள்ள அண்ணா சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக 12 வயது சிறுவன் வேகமாக ஒட்டி சென்ற பைக் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலையில் இறந்தார். இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா பைக் ஒட்டி வந்த செல்வபுரம், தெற்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





