வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம். 9பேர் கைது

கோவை செப்டம்பர் 30 கோவை சிங்காநல்லூர், நந்தா நகர் எஸ். ஆர். டி. லேஅவுட்டில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உடுமலை மோகன்ராஜ் (வயது 49) ஒண்டிப்புதூர் சபரிகிரி (வயது 33) கள்ளிமடை பஞ்சநாதன் (வயது 30) கிருஷ்ணம நாயக்கர் லேஅவுட் பார்த்திபன் பாபு (வயது 27) சிங்காநல்லூர் சி.எம்.சி. காலனி அரவிந்தன் (வயது 33) தேவேந்திர வீதி சிரஞ்சீவி ( வயது 37) நந்தா நகர் தீன தயாளன் (வயது 24) சந்திர நாயக்கர் வீதி தங்கராஜ் ( வயது 32 )அக்ரஹாரம் சரவணன் (வயது 40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ.9,500 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர்.இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்,